கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி? எவ்வளவு எடுக்கலாம்? - CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

CSC VLE HELP DESK

test banner

Two Wheeler and 4 Wheeler and Commercial Insurance Now Live With in 5 Mins Get Policy

Saturday, April 11, 2020

கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி? எவ்வளவு எடுக்கலாம்?

கொரோனா வைரஸை காரணம் காட்டி PF பணத்தை எடுக்கலாம்! இந்த அரிய வாய்ப்பில் எவ்வளவு எடுக்கலாம்?
கொரோனா வைரஸ், உலக நாடுகளையும், நாட்டு மக்களையும் துவைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்திய அரசிடம் எல்லோரையும் காப்பாற்ற போதுமான பணம் இல்லை என்பதால் சம்பளம் வாங்குபவர்களின் PF பணத்தைக் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்து இருக்கிறது.
நாம் எவ்வளவு ரூபாய் வரை பணத்தை எடுக்கலாம்? இதை எப்படி கணக்கிடுவது என விரிவாகப் பார்ப்போம்.


கொரோனா வைரஸ் PF அட்வான்ஸ்

வழக்கத்தை விட தற்போது PF அலுவலகம் வேகமாக செயல்படத் தொடங்கி இருக்கிறது போலத் தெரிகிறது. "Settlement of Covid-19 advance claims are being given high priority by EPFO and, for faster relief, you can apply even if you have already made any other claim. We are processing other claims too, but disposal is affected due to lockdown." என பலருக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கலாம்.

அரசு நடவடிக்கை

இந்த நெருக்கடியான கொரோனா லாக் டவுனால், பலர் தங்கள் வேலையையே இழக்கும் சூழல் நிலவிக் கொண்டு இருக்கிறது. இது மாத சம்பளதாரர்களுக்கும் பொருந்தும். எனவே அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, அரசு சம்பளதாரர்களின் PF பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்து இருக்கிறது

கவனிக்கவும்

PF திட்டத்தில் இணைந்து இருப்பவர்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸ் தொகை பெறலாம். இப்போது பெறும் தொகையை மீண்டும் EPFO அலுவலகத்துக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

எவ்வளவு எடுக்கலாம்?

ஒருவரின் மொத்த PF பாக்கித் தொகையில் அதிகபட்சமாக 75 சதவிகித தொகையை பெறலாம். உதாரணமாக ஒருவருக்கு PF பாக்கித் தொகை 2 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், அவர் 1,50,000 ரூபாயை கொரோனா வைரஸை காரணமாகக் காட்டி பெறலாம். இது தான் பொதுவான கணக்கு. ஆனால் இதிலும் அரசு ஒரு செக் வைத்திருக்கிறது.


பேசிக் + டிஏ கணக்கு

ஒருவர் சம்பளமாகப் பெறும் தொகையில் Basic Pay + DA (Dearness Allowance) இரண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மொத்த தொகையை 3 மாதம் எவ்வளவு பெறுவீர்களோ அவ்வளவு தான் PF தொகையில் இருந்து கொரோனா வைரஸை காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம் என்கிறார்கள்.

எடுத்துக்காட்டு

உதாரணமாக: ரவி, மாதம் 15,000 ரூபாய் பேசிக் ஆகவும், 5,000 ரூபாயை டிஏ-வாகவும் பெறுகிறார். ஆக மொத்தம் 20,000 ரூபாய் . எனவே 20,000 * 3 மாதம் = 60,000 ரூபாய். ரவிக்கு PF பாக்கித் தொகை எத்தனை லட்சம் இருந்தாலும் சரி, அவர், தற்போது 60,000 ரூபாயை மட்டும் தான் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.

குழப்பிக் கொள்ள வேண்டாம்

என்னங்க ஒன்னுமே புரியல என குழம்புகிறீர்களா. கவலை வேண்டாம்.
1. PF பாக்கித் தொகையில் 75% பணம் அல்லது
2. பேசிக் + டிஏ பணம் 3 மாதம் எவ்வளவு பெறுகிறீர்களோ அந்தப் பணம். அல்லது
3. நீங்கள் குறிப்பிடும் பணம். இந்த மூன்றில் எது குறைவோ, அந்த பணத்தை மட்டும் தான், PF-ல் இருந்து கொரோனா வைரஸைக் காரணம் காட்டி அட்வான்ஸாகப் பெறலாம்.

உதாரணம்

1. அப்துலுக்கு 5 லட்சம் ரூபாய் PF பாக்கித் தொகை இருக்கிறது. ஆக 5,00,000 * 75% = 3,75,000.
2. அப்துல் பேசிக் + டிஏ என மாதம் 35,000 பெறுகிறார் ஆக 35,000 * 3 = 1,05,000. 
3. அப்துல் கொரோன வைரஸைக் காரணம் காட்டி 1,00,000 ரூபாய் தான் அட்வான்ஸ் தொகை கேட்கிறார். ஆக மேலே சொன்ன மூன்றில் அப்துல் குறிப்பிட்ட 1,00,000 ருபாய் தான் குறைவு எனவே EPFO அலுவலகம் ஒரு லட்சம் ரூபாயைத் தான் கொடுக்கும்.

Employer + Employee 

PF பாக்கித் தொகை என்பது Employer பங்கு மட்டுமா அல்லது Employee பங்கும் சேர்த்தா என்கிற கேள்வியும் அதிகம் கேட்கிறார்கள். இரண்டு பங்கும் சேர்த்து இருக்கும் மொத்த பாக்கித் தொகையில் தான் இந்த 75 சதவிகிதம் கணக்கிடப்படும் என EPFO அலுவலகமே தெளிவுபடுத்தி இருக்கிறது.

முன்பே க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள் இந்த கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே வேறு சில காரணங்களுக்கு (மருத்துவ செலவுகள், திருமணம், கல்வி, வீடு...) க்ளெய்ம் வாங்கி இருப்பவர்கள் கூட கொரோனா வைரஸ் க்ளெய்ம் பெறலாமா? என்கிற கேள்வியும் கேட்கிறார்கள். இதற்கு அரசு PF வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ் எம் எஸ்-களிலேயே பதில் இருக்கிறது. ஏற்கனவே க்ளெய்ம் பெறுபவர்கள் கூட, இந்த கொரோன வைரஸைக் காரணம் காட்டி க்ளெய்ம் பெற விண்ணப்பிக்கலாம்.
 ------------------------------------------------------------------------------------------ 
கொரோனா வைரஸுக்காக PF withdrawal செய்வது எப்படி? படங்களுடன் செய்முறை விளக்கம்!

கொரோனா வைரஸைக் காரணம் காட்டி PF பணத்தில் எவ்வளவு ரூபாய் வரை எடுக்கலாம், அதை எப்படி கணக்கிடுவார்கள் என்பதை முன்பே விளக்கி இருக்கிறோம்.
சரி இப்போது இந்த கொரோன வைரஸை காரணம் காட்டி PF பணத்தை எப்படி withdraw செய்யலாம் அல்லது PF Claim செய்வது என விரிவாகப் பார்ப்போம்.


ஸ்டெப் 1

2. இதில் வலது பக்கத்தில் Member e-Sewa எனக் குறிப்பிட்டு இருக்கும் இடத்தின் கீழ் லாக் இன் செய்யவும். UAN - Universal Account Number & உங்கள் பாஸ்வேர்ட், கேப்சா கொடுத்த பின் சைன் இன் செய்யவும்.


ஸ்டெப் 2

1. லாக் இன் செய்த பின் மேலே காட்டி இருப்பது போல ஒரு பேஜ் ஓப்பன் ஆகும். அதில் Online Services என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
2. அதில் Claim (Form-31, 19, 10C & 10D) என்பதை க்ளிக் செய்யவும். இந்த லிங்கை க்ளிக் செய்த பின் இன்னொரு பேஜ் ஓப்பன் ஆகும்.


ஸ்டெப் 3

1. Online Claim (Form 31, 19, 10C & 10 D) பக்கத்தில், நீங்கள் EPFO அலுவலகத்துக்கு, கொடுத்து இருக்கும் உங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆதார் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் எல்லாம் இருக்கும். அதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
2. அதன் பின், BANK ACCOUNT No. (As seeded against UAN) என்கிற கட்டத்துக்கு நேராக, நீங்கள் EPFO அமைப்பிடம் கொடுத்து இருக்கும் வங்கிக் கணக்கு எண்ணை சரியாக குறிப்பிட்டு Verify செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4

1. வங்கிக் கணக்கை சரி பார்த்த பின், ஒரு பாப் அப் வரும். அதில் Warning(s) - Certificate of Undertaking என ஒரு எச்சரிக்கை வரும்.
அதில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயம்
1. எண் வங்கிக் கணக்கை சரி பார்த்துவிட்டேன், என் க்ளெய்ம் தொகை, இந்த வங்கிக் கணக்குக்குத் தான் வரும் என்பதை புரிந்து கொள்கிறேன்.
2. எண் பழைய பிஎஃப் கணக்குகள் இந்த UAN உடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. EPFO அமைப்பு, நான் இந்த க்ளெய்ம் பெற தகுதியானவரா என்பதை முடிவு செய்யும், அதே போல & என் க்ளெய்ம் தொகை எவ்வளவு என்பதையும் EPFO முடிவு செய்யும் என்பதை நான் அறிவேன். எனவே அதற்கு ஏற்றாற் போல, என் க்ளெய்ம் தொகையை EPFO அமைப்பு கொடுக்கும் அல்லது மறுக்கும்.
எனச் சொல்லி இருப்பார்கள். இதற்கு Yes கொடுங்கள். பாப் அப் மறைந்துவிடும். அதே பக்கத்தில், கடைசியில் Proceed For Online Claim என்பதை க்ளிக் செய்யுங்கள்.


ஸ்டெப் 5

1. மேலே வழக்கம் போல உங்கள் விவரங்களைக் கொடுத்து இருப்பார்கள். கடைசியாக I want to Apply for என்கிற கட்டத்தில் PF Advance (Form 31) என தேர்வு செய்யுங்கள். இதை தேர்வுச் செய்த பின் மேற்கொண்டு விவரங்களைக் கேட்கும்.
2. அதன் பிறகு Purpose for which Advance is required என்கிற காலத்தில் Outbreak of Pandemic (Covid-19) என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்குத் தேவையான பணத்தை குறிப்பிடுங்கள். (ஒரு நபருக்கு அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும் என்பதை மேலே கொடுத்த கட்டுரை லிங்கில் விளக்கி இருக்கிறோம்).
4. அதன் பின் முகவரியை குறிப்பிடுங்கள்.


ஸ்டெப் 6

1. அதே பக்கத்தில், உங்கள் வங்கியில் பாஸ் புத்தகம் (Pass Book) அல்லது காசோலை (Cheque) புத்தகத்தை அப்லோட் செய்யவும். இந்த விவரம் மிகத் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் க்ளெய்ம் நிராகரிக்கப்படலாம்.
2. கீழே I am Applying for this... என ஒரு செக் பாக்ஸ் இருக்கும் அதைப் படித்துப் பார்த்துவிட்டு டிக் செய்யவும்.
ஸ்டெப் 6 தொடர்ச்சி
3. அதன் பின் ஆதார் கார்டுடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை Enter OTP காலத்தில் நிரப்பி submit கொடுக்கவும். ஓடிபி verify செய்த பின் "OTP has been verified, eKYC updated and PF advance claim for submitted successfully on Unified portal. Please CLICK HERE to view PDF" என ஒரு செய்தி வரும்.
4. அதில் click here-ஐ அழுத்தினால் நம் விண்ணப்பம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.



ஸ்டெப் 7 செக் செய்தல்

1. மீண்டும் நீங்கள் லாக் இன் செய்து ஸ்டெப் 5-ல் சொல்லப்பட்டு இருப்பது போல I want to apply for என்கிற கட்டத்துக்கு நேராக PF Advance (Form-31)-ஐ க்ளிக் செய்தால் "Your Previous Claim is Pending already, Pleas track Claim Status CLICK ME என கீழே ஒரு வாசகம் வரும்.

ஸ்டெப் 8 

Click Me அந்த பச்சை நிறத்தில் இருக்கும் CLICK Me-யை சொடுக்கினால், 
1. உங்கள் க்ளெய்ம் டிராக்கிங் ஐடி,
2. சமர்பித்து இருக்கும் விண்ணப்ப வகை,
3. சமர்பித்த தேதி & நேர விவரங்கள்,
4. க்ளெய்ம் ஸ்டேட்டஸ்,
5. நம் விண்ணப்பத்தில் PDF லிங்க் என எல்லாமே கிடைக்கும்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள் உண்மையாகவே, கொரோனா வைரஸால் பாதிப்பு இருக்கிறது, சம்பளம் வருவது சிரமம் தான் என்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் PF-ல் இருந்து காசை வெளியே எடுத்து செலவழிக்க வேண்டாம்.

குறிப்பு:

மேலே சொன்ன வழிமுறைகளைச் செய்ய
1. முன்பே UAN activate செய்து இருக்க வேண்டும்.
2. ஆதார் எண்ணை UAN எண்ணுடன் இணைத்து இருக்க வேண்டும்.
3. அதே போல IFSC கோட் உடன், ஒரு வங்கிக் கணக்கையும் UAN உடன் இணைத்து இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment

Popular Posts